Friday, February 7, 2014

மருந்து அளவு.

                 
Please click on the link given below: 

MEDICINE DOSAGE

     

Thursday, February 6, 2014

எறும்பு - சில தகவல்கள்



எறும்புகளுக்கு மூன்று இணைப்புகளை உடைய 6 உறுதியான கால்கள். எனவே வேகமாக ஓடும். 

 

எறும்பின் அளவுக்கு அது ஓடும் வேகத்தோடு கணக்கிட்டால் அதே அளவில் மனிதன் ஓடினால் ஒரு பந்தயக் குதிரையின் வேகம் இருக்க வேண்டும். தன்னுடைய உடல் எடையைப் போல 20 மடங்கு அதிகமான எடையை எறும்புகளால் தூக்க முடியும்.

 

எறும்புகளுக்கு சாதாரணமாக ஆயுள் 45-60 நட்கள்.  ராணி எறும்புகள் 30 வருடங்கள் வரை கூட வாழும். (அட!)


எறும்புகளுக்கு பல சிறு கண்களைக் கொண்ட இரு பெரிய கண்கள். இரண்டு வயிறுகள். ஒன்று அதன் பசிக்கு. இன்னொன்று மற்ற எறும்புகளுக்கு பகிர்ந்து கொடுக்க. 



 

இதன் ரத்தம் நிறமற்றது.


 

ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication)


ராணி எறும்பு இடும் முட்டைகளைப் பாதுகாக்கும் வேலைக்கார எறும்புகள் மிகவும் சுத்தமானவை. எந்த அளவு என்றால் உதாரணத்துக்கு அந்தக் காலனியில் இருக்கும்/சேரும் குப்பைகளைக் கொண்டுபோய் அதற்கென்று இருக்கும் பகுதியில் போடும் இயல்புடையன. 

 

ஒவ்வொரு எறும்புக் குழுவுக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. இதை வைத்தே அன்னியர் உள்ளே வந்தால் அவை அவர்களை அறிகின்றன. ராணியை இழந்த எறும்புக் கூட்டம் சில மாதங்களே பிழைத்திருக்கும். வேலைக்கார எறும்புகளால் இனப் பெருக்கம் செய்ய முடியாது.



சிப்பாய் எறும்புகளும் உண்டு. ராணியைப் பாதுகாக்கவும், பக்கத்து எறும்புக் குழுக்களைத் தாக்கி ஆக்கிரமிக்கவும், அங்கிருக்கும் முட்டைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்து அடிமை எறும்புகளை உருவாக்கவும் செய்கின்றன.
 



 

சில எறும்புகள் நீந்தும். சில எறும்புகள் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீருக்கடியில் தாக்குப் பிடிக்கும். சில எறும்புகளுக்குக் கண்கள் கிடையாது. எறும்பு அடிக்கடித் தூங்கிவிடும் பழக்கமுடையது. எறும்பின் எதிரி மனிதன் அல்ல, எறும்பேதான்!
 

பூச்சி வகைகளிலேயே பெரிய அளவிலான மூளை எறும்புக்குத்தான்.


ஒட்டுண்ணிகளை அழிக்கும் ஒரு திரவத்தை (ஃபார்மிக் ஆசிட்) உமிழும் எறும்புகளைச் சில பறவைகள் தங்கள் சிறகில் ஏற்றிக் கொள்கின்றன. தங்கள் இறகுகளை ஒட்டுண்ணிகளிடமிருந்து இந்த வகையில் அவை பாதுகாத்துக் கொள்கின்றன.

எறும்புகளுக்குக் காதுகள் கிடையாது. அதிர்வுகளைக் கொண்டே சப்தங்களை அறிகின்றன.

நுரையீரல் இல்லாததால் உடம்பில் உள்ள சிறு துளைகள் வழியே ஆக்சிஜன் உள் செல்வதும், அதே துளைகள் வழியாகவே கார்பன் டை ஆக்சைட் வெளிவருவதும் நிகழ்கின்றன.

பெரு நாட்டில் மழைக்காடுகளில் வாழும் செஃபலோடிஸ் ஏட்ரியஸ் இனமே முதன் முதலில் கண்டறியப்பட்ட சறுக்கும் எறும்பாகும். 



 

ஏதோ ஒரு காரணத்தால் மரத்தில் இருந்து இவை கீழே விழ நேர்ந்தால் பல நூறு அடி கீழே போவதோடு நீரில் விழுந்து உயிர்விடவோ அல்லது வேறு விலங்குக்கு இரையாகவோ நேரிடலாம். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த எறும்புகள் கீழே விழ நேர்கையில் தங்கள் பார்வைத் திறனைப் பயன்படுத்தி (பிற எறும்புகளுக்குப் பார்வைத் திறன் குறைவென்பதாலேயே ஃபெரமோன்களைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பின் தொடர்கின்றன.) மரத்தின் தண்டுப் பகுதியைச் சரியாக வந்தடைகின்றன.




தான் வசிக்குமிடத்திலிருந்து 200 மீட்டர் - 655 அடி -  இரை தேடிச் செல்லும் ஒருவகைப் பாலைவன எறும்புகள் எப்படி வழி தொலையாமல் மறுபடி இருப்பிடத்தை அடைகின்றன என்று இங்கு  படித்தேன்.

தஞ்சை வேங்குராயன் குடிகாடு பகுதியில் உள்ள வீடுகளில் படையெடுக்கும் எறும்புகளால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று வீடியோவுடன் செய்தி தினமலரின் இந்தப் பக்கத்தில்!


எறும்பைப்பற்றி ஒளவையார்....  !
  • வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
             எறும்புந்தன் கையாலெண் சாண்.
  • அன்னாய்! யானை, எறும்பு, ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ? எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது?




Friday, January 31, 2014

கிராம்பு

               
கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு -

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

கராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் வாந்திபேதி குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கராம்பு மிகச் சிறந்தது. கராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் உள்ளிச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது.



அன்புடன்  உங்கள் 

அனந்தநாராயணன்